சென்ட்ரல், கோயம்பேடுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.13 மணியளவில் மொபைல் நம்பர் ஒன்றில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் கிடைத்தது. அதில், போலீஸ் பிடித்து வைத்திருக்கும் ஐஎஸ்எஸ்எஸ் சம்பந்தப்பட்ட நபர்களை அடுத்த 42 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த எஸ்எம்எஸ் தமிழில் வந்துள்ளது. 2 முறை இந்த எஸ்எம்எஸ் வந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ரயில்வே ஸ்டேசனின் அனைத்து நடைமேடை, சரக்கு பெட்டக அறை உட்பட எல்லா பகுதிகளும் துப்புரவாக ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையின் முடிவில், எஸ்எம்எஸ்ஸில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த மொபைல் எண் யாருடையது, எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...