டெங்குவை ஒழிக்க சுற்றுப்புரத் தூய்மை அவசியம்- மாநகராட்சி ஆணையர்


கோவை மாவட்டம், தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் கோவை மாநகராட்சி மற்றும் இந்து நாளிதழ் இணைந்து செவ்வாயன்று டெங்கு விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. இதில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் மாணவர்களிடையே பேசியதாவது:-



“கோவை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் டெங்கு விழிப்புணர்வை எடுத்துரைக்க வேண்டும். 

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. வீட்டின் அருகே தொட்டியில் சேமித்து வைத்துள்ள நீர், பழைய டயர்கள், தேனீர் கோப்பைகள், தேங்காய் ஓடு, உடைந்த பானை முதலியவற்றில் தேங்கும் நீரில் கொசு அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக உள்ளது. எனவே, நீர் தேங்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உருவாகும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்” என பள்ளி மாணவர்களிடம் விளக்கிக் கூறினார்.



இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) மோகனசுந்தரி, பள்ளி செயலாளர் சிவராமன், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஆர்.கே எர்கான் மேலாண்மை இயக்குநர் சிவசங்கர், இந்து நாளிதழின் உறுப்பினர் அமர்நாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...