ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரிக்கை

கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலசங்கம் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தி௫மண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கடந்த மாதம் 9-9-2016ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம், பட்டா மனைகளையும் அங்கிகாரம் பெறாமல் கட்டியுள்ள வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளையும் இனிமேல் பதிவுசெய்ய இடைக்கால தடை உத்தரவு பிறபித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பேசும்பொழுது:- உயர்நீதிமன்றம் உத்தரவினால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி கிடப்பதுடன் இத்தொழிலை நம்பியுள்ள இலட்சக்கணக்கான முகவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு 8ஆயிரத்து 500கோடி வ௫வாய் ஈட்டித் த௫வதும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரி தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இதில், மேற்கு மண்டல தலைவர் நேரு நகர் நந்து மற்றும் ஒ௫ங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...