பிரம்படியால் பெண் கதறல்: பார்த்தவர்கள் கைதட்டி ரசிப்பு

ஆசேஹ்: இந்தோனேஷியாவில், பொதுமக்கள் முன்னிலை யில், பெண்ணுக்கு பிரம்படி வழங்கப்பட்டது. வலி தாங்காமல், அந்த பெண் கதறியதை, வேடிக்கை பார்த்தவர்கள், கைதட்டி ரசித்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், ஆசேஹ் மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது; இங்கு, 'ஷரியத்' சட்டம், கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சூதாடுவது, மது குடிப்பது, திருமணத்திற்கு முன், ஆணும் பெண்ணும் சுற்றி திரிவது, ஓரினச் சேர்க்கை ஆகியவை, கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்களை செய்பவர்களுக்கு, பலர் முன்னிலையில், பிரம்படி வழங்கப்படும்.

இந்நிலையில், ஷரியத் சட்டத்தை மீறிய, 20 முதல், 30 வயதுக்கு உட்பட்ட, ஏழு ஆண்கள், ஆறு பெண்களுக்கு, தலைநகர் பண்டா ஆசேஹில் உள்ள மசூதியில், பலர் முன்னிலையில், 23 பிரம்படி வழங்கப்பட்டது; இதில், ஒரு பெண், வலி தாங்காமல் கதறினார். அதை பார்த்த மற்றவர்கள், கைதட்டி ரசித்தனர்.

''தவறு செய்த ஒரு பெண், கர்ப்பிணி என்பதால், அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. குழந்தை பெற்ற பின், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும்,'' என, பண்டா ஆசேஹ் துணை மேயர் ஜைனல் அர்பின் தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...