லாட்டரி சீட்டுகளின் புழக்கத்தை தடுத்து நிறுத்துக- இளைஞர் பெருமன்றம் மனு



கோவையில் அதிகரித்துவரும் ஒரு எண் லாட்டரி சீட்டுகளின் புழக்கத்தை தடுத்து நிறுத்தி, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

''கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒரு எண் லாட்டரி சீட்டுகளின் புழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கபட்ட பொதுமக்கள் துடியலூர் மற்றும் மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து வாய்மொழியாக புகார் மனு அளித்தும் காவல் துறையோ மாவட்ட நிர்வாகமோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கோவை மாநகரில் பல பகுதிகளில் ஆன்லைன் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி தொழில் ஏகபோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான குடும்பங்கள் அடிமையாகி வருமானத்தை முழுவதுமாக இதில் செலவு செய்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவணம் செலுத்தி லாட்டரி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

மேலும், துபாயில் இந்திய மீனவர்கள் வேலை செய்த நிறுவனங்களில் ஊதியம் வழங்காமல், அவர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு சம்பள பாக்கியை தராமல் விமான பயண சீட்டு மட்டும் கொடுத்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்நிறுவனங்களின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மனு அளித்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...