தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட 12 அரசு ஊழியர்கள் நீக்கம்

தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 100 நாட்களுக்கும் மேலாக அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசு ஊழியர்கள் சிலர் இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டுவதாகவும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக கண்காணித்து அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்புகளை தயாரித்து அரசுக்கு அனுப்பியது. அதில் 36 அரசு ஊழியர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன

இந்த கோப்புகளை ஆய்வு செய்த அரசு, 12 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள் வருவாய், பொது சுகாதார பொறியியல், ஊரக வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தின் 126-வது பிரிவின்படி இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் ஜாமீனில் வந்துள்ளனர். சிலர் கைது நடவடிக்கையை தவிர்த்து வருகின்றனர்’ என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதேபோல் கடந்த 1990ம் ஆண்டு தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கல்வி அமைச்சர் உள்ளிட்ட 5 அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டனர். பின்னர் ஊழியர்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...