வடகொரியா ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி

சியோல்: வடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது.

ஏவுகணை சோதனை:

வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட 'முசுடன்' ஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் 'முசுடன்' ஏவுகணை சோதனையை நடத்தியது. இருப்பினும் இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

8 முறை சோதனை:

இதுபற்றி தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் விடுத்து உள்ள அறிக்கையில், வடக்கு பியாங்யாங் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு முசுடன் ஏவுகணை சோதனை நடைபெற்றதாகவும், அந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறி விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. வடகொரியா இந்த ஆண்டில் 8 முறை முசுடன் ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதும், அவற்றில் ஒன்று மட்டுமே வெற்றி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...