மீண்டும் விழுந்த காட்டு யானை- ஏமாற்றத்தில் வனத்துறை

கோவையை அடுத்த பெரிய தடாகம் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் கோளாறு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் பொக்லைன் உதவியுடன் அந்த யானையை தூக்கி நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்க முயற்சி மேற்கொண்டனர். 



அப்போது யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 4 யானைகள் கொண்ட கூட்டம் வந்ததால் சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக மருத்துவக் குழுவினர் யானைக்கு தண்ணீரும், பழங்களும் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். 

இதில், யானையில் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை நிற்க வைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் எழுந்து நின்ற யானை, வனத்துறையினர் வைத்த தண்ணீரை குடித்துவிட்டு காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றது.

இந்நிலையில், மீண்டும் வெள்ளியன்று அந்த பெண் காட்டு யானை அப்பகுதியிலேயே படுத்துக்கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவையில், கடந்த சில நாட்களாக யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இச்சம்பவம் கால்நடை ஆர்வலர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...