கோவை ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையருமான பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம் இன்று (21.10.2016) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுடன் செயலாக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெலலிதா அறிவித்த சிறப்பு அறிவிப்பு திட்டங்களான  சங்கனூர்பள்ளம் சீரமைப்புப்பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், வெள்ளளுர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் குறித்தும், மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை, அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல் போன்ற திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

இதற்கு முன்னர் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் டவுன் ஹால் பெரிய கடை வீதி ஆகிய மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஆய்வு செய்தார். மேலும், சங்கனூர்பள்ளம் கால்வாய் சீரமைப்புப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களான மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு டெக்ஸ்டூல் பிரிட்ஜ், அவினாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜும்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...