யானையைப் பார்த்து பீதி - முதாட்டி பலி

வால்பாறை, சிறுகுன்றா டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி ஈஸ்வரி (68). இருவரும் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் வெளிப்புறத்தில் சத்தம் கேட்டுள்ளது. ஈஸ்வரி வீட்டின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளார். அப்போது வெளியில் இருந்த யானை ஒன்று பிளறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வால்பாறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஈஸ்வரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து யானைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் இந்நிலையில், தற்போது யானையால் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...