மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டு சிறை

கலிபோர்னியா: அமெரிக்காவில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 1,503 ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவன் ஜான், 41; இவன், தன் மகளை, 2009 - 2013 வரை, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்போது, 23 வயதாகும் அந்தப் பெண், தந்தை தனக்கு செய்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார்; போலீசார், ஜானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பிரஸ்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.

தந்தைக்கு வருத்தம் கிடையாது:

வழக்கை விசாரித்த நீதிபதி, எட்வர்ட் சர்கிசியனிடம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம்: என்னை, உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இதிலிருந்து காப்பாற்ற வேண்டிய தந்தை, அந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னை பலாத்காரம் செய்தார். சிறுமியாக இருந்ததால், என்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை; நான் அடைந்த வலி மற்றும் வேதனைக்காக, ஒரு போதும் என் தந்தை வருத்தம் அடைந்தது கிடையாது. இவ்வாறு, அந்த பெண் வாக்குமூலம் அளித்தார். 

வாழ அருகதையற்றவன்:

இந்த வழக்கில், ஜானுக்கு, 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். நீதிபதி கூறுகையில், “குற்றவாளி, இந்த உலகில் வாழவே அருகதையற்றவன்; சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவன். இவன், வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும்,'' என்றார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...