எட்டிமடையில் தொடரும் சுகாதார சீர்கேடு - மக்கள் ஆவேசம்!

கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை கேரளாவை சேர்ந்த ஷாஜி மற்றும் மைசூரை சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அந்த இடத்தில் கழிவுப்பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் கழிவு பொருட்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இன்று காலை கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றுக்கொண்டு 23 லாரிகள் எட்டிமடை பகுதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளால் கோபத்தில் இருந்த பொதுமக்கள் அந்த கழிவுப்பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த லாரிகளில் மருத்துவக்கழுவு, இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவு, பழைய துணிகள் என பல விதமான கழுவுகள் கலந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், சம்பவ இடத்தில் அதிமுகவை சேர்ந்த கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் மற்றும் மதுக்கரை வட்டாச்சியர் சிவசங்கர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் கேரளாவில் இருந்து கழிவுகளை மொத்தமாக கொண்டுவந்து, அவற்றை தரம் பிரித்து விற்பனை செய்வதற்காக இந்த இடத்தை குடோனாக ஷாஜியும், சதிரும் பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.⁠⁠⁠⁠





Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...