எட்டிமடையில் தொடரும் சுகாதார சீர்கேடு - மக்கள் ஆவேசம்!

கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை கேரளாவை சேர்ந்த ஷாஜி மற்றும் மைசூரை சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அந்த இடத்தில் கழிவுப்பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் கழிவு பொருட்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இன்று காலை கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றுக்கொண்டு 23 லாரிகள் எட்டிமடை பகுதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளால் கோபத்தில் இருந்த பொதுமக்கள் அந்த கழிவுப்பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த லாரிகளில் மருத்துவக்கழுவு, இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவு, பழைய துணிகள் என பல விதமான கழுவுகள் கலந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், சம்பவ இடத்தில் அதிமுகவை சேர்ந்த கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் மற்றும் மதுக்கரை வட்டாச்சியர் சிவசங்கர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் கேரளாவில் இருந்து கழிவுகளை மொத்தமாக கொண்டுவந்து, அவற்றை தரம் பிரித்து விற்பனை செய்வதற்காக இந்த இடத்தை குடோனாக ஷாஜியும், சதிரும் பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.⁠⁠⁠⁠





Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...