இரண்டாம் முறையாக பி.சி.ராய் விருது பெறும் ஜெம் முதன்மை மருத்துவர்


கோவை ஜெம் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு, மிகச் சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக டாக்டர் பி.சி.ராய் விருதைப் பெறவுள்ளார்.

மருத்துவத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் டாக்டர் பி.சி.ராய் விருது மிகவும் உயர்ந்ததாகும். இந்திய அரசாங்கம் டாக்டர் பி.சி.ராய் பெயரில் தேசிய மானியக் குழுவை அமைத்துள்ளது. இது மருத்துவத்துறையில் பல பிரிவுகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி வழங்கப்படும் விருதாகும்.

இந்திய ஜனாதிபதி இவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரூ.1 லட்சம் நிதியாக வழங்கி கௌரவிப்பார்.

2006 ஆம் ஆண்டில் டாக்டர் சி.பழனிவேலு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மற்றும் ஜீரண மண்டல சிறப்பு சிகிச்சை பிரிவிற்காக டாக்டர் பி.சி.ராய் விருதை பெற்றார்.

2015 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த மதிக்கத்தக்க டாக்டர் பி.சி.ராய் விருதை சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக தற்போது பெறுகிறார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...