கஞ்சா விற்றவர் கைது

கோவை, கணபதி மாநகர் பகுதியில் அமைந்துள்ள பன்னாரியம்மன் கோவில் அருகே ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீளமேடு துணை காவல் ஆய்வாலர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அதேப் பகுதியைச் சேர்ந்த சாம் ஹார்பர்ட் (23) என்பதும், பீளமேடு, ஹோப்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதும் தெரியவந்தது. 

மேலும், அவரை சோதனையிட்டதில் அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...