பேருந்தில் பிக்பேக்கட் - பொதுமக்கள் தர்ம அடி


கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). செவ்வாயன்று வேலைக்குச் செல்வதற்காக பீளமேட்டில் இருந்து பேருந்து ஏறியுள்ளார். ராதாகிருஷ்ணா மில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது கோவிந்தராஜின் அருகில் நின்றிருந்த வாலிபர் அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையறிந்த கோவிந்தராஜன் கூச்சலிடவே பயணிகள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து,  பீளமேடு காவல் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு (40) என்பதும், இது போன்ற பல திருட்டுகளில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...