ஒரே பகுதியில் பெண்களிடம் 13 சவரன் கொள்ளை

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (55). நேற்றுமுன்தினம் சூலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின், உறவினர்களுடன் எஸ்.எல்.பி.நகரில் உள்ள பூங்காவிற்கு சென்றுவிட்டு ராஜம்மாள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். 

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி ஆனந்தவள்ளி (35) செவ்வாயன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ஆனந்தவள்ளியின் கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். இதனை தடுக்க முயற்றித்த ஆனந்தவள்ளி, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இந்நிலையில், அவர்களது வாகன எண்ணை மட்டும் ஆனந்தவள்ளி கவணித்துள்ளார். அந்த எண் TN 36 D 2333 ஆகும். இந்த வாகன எண்ணை ஆதாரமாகக் கொண்டு சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...