கருவில் இருந்த குழந்தை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 2 முறை பிறந்த அபூர்வ குழந்தை

அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர்ப் மார்கரேட் ஹகின்ஸ். இவர் கருவுற்றிருந்தார். இந்த நிலையில் கருவுற்று 16 வாரங்கள் ஆன நிலையில் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் அவரை சோதித்த போது மார்கரேட் வயிற்றில் இருந்த குழந்தைக்கு   கட்டி (sacrococcygeal teratom)ஒன்று உருவாகி  குழந்தையின் ரத்த ஓட்டத்தை தடுத்து அதனால் குழந்தையின் இதயம் செயலிழக்கும் அபாயத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் 23வது வாரம் ஆகும் போது அந்த இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடும் என்றும் கண்டறிந்தனர். இதனால் குழந்தையை காப்பாற்ற ஒரு வித்தியாசமான  முடிவை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி மார்கரேட் கரு வளர்ந்து ஆறு மாதம் ஆகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையின் முதுகில் இருந்த அந்த அபாய கட்டியை நீக்கினர், பின்னர் மறுபடியும் அந்த குழந்தையை தாயின் கருவில் வைத்து மருத்துவர்கள் மூடினார்கள்.

பிறகு 12 வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்த மார்கரேட் பிறகு அந்த பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தார்.

இந்த சம்பவமானது மருத்துவ உலகில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...