ஐந்து மண்டலங்களிலுள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களிலுள்ள மாநகராட்சி ‘பொது ஒதுக்கீட்டு இடங்கள்’ (ரிசர்வ் சைட்) கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக நகரமைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையியில்:- “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அலுவலருடன் ஆலோசனைகள் செய்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், கிழக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 13 லட்சத்து 78 ஆயிரத்து 552.20 சதுரமீட்டர் அளவிலுள்ள 293 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மேற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 10 லட்சத்து 29 ஆயிரத்து 952.275 சதுரமீட்டர் அளவிலுள்ள 439 பொது ஒதுக்கீட்டு இடங்களும், வடக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6 லட்சத்து 3 ஆயிரத்து 645.57 சதுரமீட்டர் அளவிலுள்ள 506 பொது ஒதுக்கீட்டு இடங்களும், தெற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6லட்சத்து 60 ஆயிரத்து 812.51 சதுரமீட்டர் அளவிலுள்ள 111 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மத்திய மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரத்து 373.86 சதுரமீட்டர் அளவிலுள்ள 60 பொது ஒதுக்கீட்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது அலுவலர்களுடன் ஆலோசனை செய்து துரிதமான முறையில் விரைவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்) பற்றி பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏதுவாக கோயம்புத்தூர் மாநகராட்சி இணைய தளமான (www.ccmc.gov.in) என்ற முகவரியில் உள்ள (Reserved site details) என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு  மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...