2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் !


கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்த 12 காட்டு யானைகள், சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்து  பொதுமக்களை அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள்  ஊருக்குள் புகுந்து தாக்கி வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 1 மணி அளவில் நாகராஜின் தோட்டதிற்குள் புகுந்த 12 காட்டு யானைகள் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியதோடு அருகில் இருந்த வாழை தோப்பில் புகுந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்துள்ளது. 



பின்னர், தோட்டத்தில் அமைந்துள்ள தோட்ட குடிசையை காட்டுயானைகள் தாக்கி உள்ளது. அப்போது குடிசையில் தங்கி இருந்த விவசாயி வடிவேல் நாய் குரைக்கும்  சத்தம் கேட்டு எழுந்துபார்த்தபோது யானைகள் குடிசையை சுற்றி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உயிருக்கு பயந்து தோட்டத்தை விட்டு வெளியேறியவரை சில யானைகள் அவரை துரத்தியதோடு, குடிசையில் வைத்திருந்த அரிசி, பருப்பு மற்றும் தென்னை வெல்லம் ஆகியவை உட்கொண்டதுடன், சாலை குடிசையை இடித்து தள்ளியதில் உள்ளிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களும் நொறுக்கியது.



யானைகளிடமிருந்து தப்பித்த வடிவேல் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தாமதமாக வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை பக்கத்து  தோட்டத்திற்கு விரட்டினர். யானைகள் விலை நிலங்களில் புகுந்ததின் காரணமாக சுமார் 2லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதற்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் தோட்ட உரிமையாளர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 



மேலும் யானைகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரே சமயத்தில் 12 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...