2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் !


கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்த 12 காட்டு யானைகள், சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்து  பொதுமக்களை அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள்  ஊருக்குள் புகுந்து தாக்கி வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 1 மணி அளவில் நாகராஜின் தோட்டதிற்குள் புகுந்த 12 காட்டு யானைகள் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியதோடு அருகில் இருந்த வாழை தோப்பில் புகுந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்துள்ளது. 



பின்னர், தோட்டத்தில் அமைந்துள்ள தோட்ட குடிசையை காட்டுயானைகள் தாக்கி உள்ளது. அப்போது குடிசையில் தங்கி இருந்த விவசாயி வடிவேல் நாய் குரைக்கும்  சத்தம் கேட்டு எழுந்துபார்த்தபோது யானைகள் குடிசையை சுற்றி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உயிருக்கு பயந்து தோட்டத்தை விட்டு வெளியேறியவரை சில யானைகள் அவரை துரத்தியதோடு, குடிசையில் வைத்திருந்த அரிசி, பருப்பு மற்றும் தென்னை வெல்லம் ஆகியவை உட்கொண்டதுடன், சாலை குடிசையை இடித்து தள்ளியதில் உள்ளிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களும் நொறுக்கியது.



யானைகளிடமிருந்து தப்பித்த வடிவேல் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தாமதமாக வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை பக்கத்து  தோட்டத்திற்கு விரட்டினர். யானைகள் விலை நிலங்களில் புகுந்ததின் காரணமாக சுமார் 2லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதற்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் தோட்ட உரிமையாளர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 



மேலும் யானைகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரே சமயத்தில் 12 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...