திருமலையம்பாளையத்தில் யானைகள் தொடர் அட்டகாசம்!


கோவை திருமலையாம் பாளையம் விவசாய நிலத்திற்குள் இரண்டாவது நாளாக புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தது, வனத்துறை அலட்சியத்தால் விவசாய பயிர்கள் நாசமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கோவை திருமலையாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பரின் தோட்டத்திற்குள் நேற்று முன் தினம் புகுந்த 13 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட ஒரு ஏக்கர் தக்காளி பயிர் மற்றும் தென்னை, வாழை , தேக்கு மரங்களை நாசம் செய்தது, இதை அடுத்து விடிய விடிய போராடி யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவு 11 மணியளவில் 3 குட்டிகளுடன் மொத்தம் 9 யானைகள் பக்கத்துத்தோட்டமான கோயஸ் தோட்டம் உரிமையாளர் பி.வி. முகமது தாஷிர் என்பரின் தோட்டத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களையும் முற்றிலுமாக நாசம் செய்தது. 



மேலும் சுற்றுச்சுவரை உடைத்து அங்குள்ள ஒரு தொழிற்சாலைக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாலை 3 மணிக்கே வருவதாக கூறிய வனத்துறையினர், இரவு ஒரு மணி வரை வராத்தால் அப்பகுதி விவசாயிகளே வனத்திற்குள் விரட்டியடித்தனர். வனத்துறைத்துறையினர் அலச்சியபோக்கே இந்த நாசத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  மேலும் விரட்டியடிக்கப்பட்ட யானைகள் பக்கத்துத்தோட்டதிற்குள் நுழைந்ததால் இரவு முழுவதும் தூங்காமல் அப்பகுதி விவசாயிகள் விழித்திருக்க நிலை ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...