ஓரினசேர்க்கையை ஊக்குவிக்கும் ''திரைக்கு வராத கதை''க்கு தடை கோரி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உஷேன். ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தினை தடைசெய்யக் கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து ஜாகிர் உஷேன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

''கடந்த 28ம் தேதியன்று திரைக்கு வந்த படம் ''திரைக்கு வராத கதை''. துளசி ராஜ் இயக்கத்தில் கே.மணிகண்டன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இனியா, நதியா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது பெண்கள் ஓரினசேர்க்கையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற படங்களை வெளியிட்டால் சமூக பிரச்சனைகளான கள்ளத் தொடர்பு, விவாகரத்து உள்ளிட்டவை அதிகரிக்கும். சமீபகாலமாக பெண் குழந்தைகள் அதிகப்படியாக பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியாகியுள்ளது பெண்களின் மீதான சமூகச் சிக்கலை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும். இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கையைக் கொண்டு இயக்கப்பட்டுள்ள ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்'' என கூறினார்.

Newsletter

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....