ஓரினசேர்க்கையை ஊக்குவிக்கும் ''திரைக்கு வராத கதை''க்கு தடை கோரி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உஷேன். ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தினை தடைசெய்யக் கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து ஜாகிர் உஷேன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

''கடந்த 28ம் தேதியன்று திரைக்கு வந்த படம் ''திரைக்கு வராத கதை''. துளசி ராஜ் இயக்கத்தில் கே.மணிகண்டன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இனியா, நதியா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது பெண்கள் ஓரினசேர்க்கையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற படங்களை வெளியிட்டால் சமூக பிரச்சனைகளான கள்ளத் தொடர்பு, விவாகரத்து உள்ளிட்டவை அதிகரிக்கும். சமீபகாலமாக பெண் குழந்தைகள் அதிகப்படியாக பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியாகியுள்ளது பெண்களின் மீதான சமூகச் சிக்கலை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும். இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கையைக் கொண்டு இயக்கப்பட்டுள்ள ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்'' என கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...