வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டும் பூசாரி- ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கனுவாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராஜராஜேஷ்வரி (38). அப்பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது வீட்டின் அருகில் உள்ள கருப்பராயன் கோவில் பூசாரி தொடர்ந்து இவர்களது வீட்டினை காலி செய்யுமாறு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து ராஜராஜேஷ்வரி கூறுகையில்,

''கனுவாய் பகுதியில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எங்களது வீட்டின் கட்டிடத்தில் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளேன். எங்களது வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. அங்கு பூசாரியாக மணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எங்களது வீட்டினை காலி செய்துவிட்டு வீட்டினை கோவிலுக்கு தந்துவிடுமாறு அந்த கோவில் பூசாரியும், அவரது மனைவியும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தநிலையில், தொடர்ந்து அவரும், அவரது மனைவியும் கடவுளின் பெயரைச் சொல்லி எங்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வீட்டினை காலி செய்யாவிட்டால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என கூறுகின்றனர். 

இந்த விசயத்தில் உடனடியாக ஆட்சியர் தலையிட்டு கடவுளின் பெயரைக் கூறி மிரட்டி வரும் கருப்பராயன் கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கருப்பராயன் கோவில் பூசாரி மணியே காரணம்'' என கூறினார்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...