அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்த கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி

கோவை மாநகரில் அனைத்து உடல்நல சிகிச்சை தேவைகளுக்கும் ஒரே புகழிடமாகத் திகழும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஹைதராபாத்தைச் சார்ந்த அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் உடன் இணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு 2017ம் ஆண்டு ஜூலையில் முழுமையாக இயங்கச் செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இக்குழுமங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட், செயல் இயக்குநரும் மற்றும் கூட்டு நிறுவனருமான ஜோசப் ஏ.நிக்கோலஸ் கூறியதாவது:- 

அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் என்பது மேற்கத்திய தரக்கட்டுப்பாடுகளை சார்ந்து முழுமையான உயர்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் நிறுவனமாகும். இதன் முதல் மையத்தை தமிழகத்தில் கோவை மாவட்ட ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பெறுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனத் தலைவரும், நரம்பு மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் கே.மாதேஸ்வரன் கூறியதாவது:- 

''சமூக ஊடகம் மற்றும் இணையதள வசதி எளிதாக கிடைக்கும் நிலையில் மக்கள் இப்போது உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று விரும்புகிறார்கள். எங்களுடைய விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு, அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்து எங்களுடைய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகிலுள்ள தலைசிறந்த புற்றுநோய் மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு மருத்துவ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆலோசனையில் உருவான இத்திட்டம், இக்குழுமத்தை அங்கம் வகிக்கும் பிரசிதிபெற்ற மருத்துவ புற்றுநோயியல் வல்லுநர் டாக்டர் சுதாகர் நடராஜன் மற்றும் அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட் மருத்துவ புற்றுநோயியல் இயக்குநர் தலைமையில் சிகிச்சை ரீதியாக நடத்தப்படும்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...