2.4 கிலோ கஞ்சா பறிமுதல்!


புளியம்பட்டியிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த இருவரை கோவை காரமடை வனத்துறையினர் பிடித்து போதை பொருள் தடுப்பு நுன்னறிவு பிரிவு போலிஸிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.



கோவை காரமடை வனப்பகுதியில் நேற்று மதியம் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரளா பதிவு எண் கொண்ட பொலேரோ வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர். போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.



மேலும் அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு நுன்னறிவு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் காரின் உரிமையாளர் சதீஷ் குமார் என்றும்,மற்றொருவர்கள் ரமேஷ் குமார் என்பதும் தெரிய வந்த்து. மேலும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடுக்கு எடுத்துசென்றதும் தெரிய வந்தது, இதை அடுத்து கார் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பரிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...