தினத்தந்திக்கு வயது 75..! தமிழ்நாடுக்கு வயது 60..!

தினத்தந்தி தொடங்கப்பட்டு இன்று 75 ஆண்டுகளுடன் பவள விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உதயமாகி இன்று 60வது ஆண்டுகள் ஆகிறது.

தினத்தந்தி பவள விழா:-

1942ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களால் முதன் முதலாக மதுரை மாநகரில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்து விட்டது தினத்தந்தி. 'தந்தி' தொடங்கப்பட்டபோது, இரண்டாவது உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. போர்ச்செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கியது தந்தி. இந்தியாவிலும், அகில உலகிலும் அடுக்கடுக்காக எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வல்லரசு நாடுகளிலும், பிற நாடுகளிலும் பற்பல ஆட்சி மாற்றங்கள் நடந்தன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்திய வரலாற்றிலும் பல திருப்பங்கள் ஏற்பட்டன.  நாள்தோறும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை, தமிழ் மக்களுக்கு சுடச்சுட தினத்தந்தி வழங்கியது.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தலைமையில் இயங்கிய தினத்தந்தி தற்போது அவர் மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் தலைமையில் சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, பெங்களூர், மும்பை என 16 பதிப்புகளில் தினமும் 16,79,837 பிரதிகளை விநியோகம் செய்து வருகிறது. 



இந்த நடப்பு ஆண்டிலும் 1,07,362, பிரதிகள் உயர்ந்து, 75 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது தினத் தந்தி!

தமிழ்நாடு மொழிவாரி மாநிலம்:-

மொழிவாரி மாநில அமைப்புகள், 1956 நவம்பர் 1ம் நாள் சட்டப்படி பிரிக்கப்பட்ட தனி மாநிலங்களாக அதிகாரம் பெற்றன. அதில் தமிழ்நாடு நவம்பர் 1ம் நாள் மொழிவாரி மாநிலம் பிரிந்து இன்றுடன் அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களாக அமைய  காமராஜர், பெரியார், அண்ணா, ஜீவா, நேசமணி, சிலம்பு செல்வர், சங்கரலிங்கனார் போன்ற தலைவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்கள் மூலம் தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களில் தமிழ்நாடு தனி மாநிலமாகவும்,  ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்துள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...