தினத்தந்திக்கு வயது 75..! தமிழ்நாடுக்கு வயது 60..!

தினத்தந்தி தொடங்கப்பட்டு இன்று 75 ஆண்டுகளுடன் பவள விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உதயமாகி இன்று 60வது ஆண்டுகள் ஆகிறது.

தினத்தந்தி பவள விழா:-

1942ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களால் முதன் முதலாக மதுரை மாநகரில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்து விட்டது தினத்தந்தி. 'தந்தி' தொடங்கப்பட்டபோது, இரண்டாவது உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. போர்ச்செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கியது தந்தி. இந்தியாவிலும், அகில உலகிலும் அடுக்கடுக்காக எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வல்லரசு நாடுகளிலும், பிற நாடுகளிலும் பற்பல ஆட்சி மாற்றங்கள் நடந்தன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்திய வரலாற்றிலும் பல திருப்பங்கள் ஏற்பட்டன.  நாள்தோறும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை, தமிழ் மக்களுக்கு சுடச்சுட தினத்தந்தி வழங்கியது.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தலைமையில் இயங்கிய தினத்தந்தி தற்போது அவர் மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் தலைமையில் சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, பெங்களூர், மும்பை என 16 பதிப்புகளில் தினமும் 16,79,837 பிரதிகளை விநியோகம் செய்து வருகிறது. 



இந்த நடப்பு ஆண்டிலும் 1,07,362, பிரதிகள் உயர்ந்து, 75 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது தினத் தந்தி!

தமிழ்நாடு மொழிவாரி மாநிலம்:-

மொழிவாரி மாநில அமைப்புகள், 1956 நவம்பர் 1ம் நாள் சட்டப்படி பிரிக்கப்பட்ட தனி மாநிலங்களாக அதிகாரம் பெற்றன. அதில் தமிழ்நாடு நவம்பர் 1ம் நாள் மொழிவாரி மாநிலம் பிரிந்து இன்றுடன் அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களாக அமைய  காமராஜர், பெரியார், அண்ணா, ஜீவா, நேசமணி, சிலம்பு செல்வர், சங்கரலிங்கனார் போன்ற தலைவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்கள் மூலம் தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களில் தமிழ்நாடு தனி மாநிலமாகவும்,  ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்துள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...