வீணாகும் குடிநீர்...குமுறும் மக்கள்!

கோவை தொண்டமுத்தூர் ரோடு, பூசாரிப்பாளையம் அடுத்து பனைமரத்தூர் பகுதியில் 3 மாதகாலமாக நடுரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என அப்பகுதியில் வாழும் மக்கள் கூறியுள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்: 'தண்ணீர் குழாய் உடைந்து வீணாகிக் கொண்டிருப்பதை பல முறை கவுன்சிலரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் சரிசெய்து ஓரிருநாட்களில் மீண்டும் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.



மேலும் இப்பகுதியில் வீடுகள் பள்ளத்தில் அமைந்துள்ளதால் தண்ணீர் வீடுகளில் புகுந்து விடுவதாக கூறினர். 24 மணி நேரமும் நீர் தேங்கியே இருப்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேளைக்கு செல்பவர்கள் மீது சேற்று நீரை இரைத்து செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த குழாய் கசிவு பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வினை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர், 

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...