கோவை ரைபில் கிளப்பை மேம்படுத்தும் முயற்சி தீவிரம்- காவல் ஆணையர்

கோவை பிஆர்எஸ் காவல் பயிற்சி மைதானத்தில் கடந்த 1956ம் வருடம் முதல் ரைபில் கிளப் இயங்கி வருகிறது. அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பிஆர்எஸ் ரைபில் கிளப்பை மேம்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

''இந்த ரைபில் கிளப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 70 பேர் நிரந்திர உறுப்பினர்களாவர். நிரந்திர உறுப்பினர்களுக்கு வைப்புத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதுபோக மாணவ, மாணவிகளும் 125 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், இத்தகைய பெரிய தொகையினை அவர்கள் கட்ட முடியாது என்பதால் பள்ளி மாணவ, மாணவிகளிடம் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

ரைபில் கிளப் 70 மீட்டர் நீலமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 22 ஆயிரம் சதுர அடி அளவுக்கு ரைபில் எல்லை தற்போது உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிக்கு இது போதுமானதாக இல்லை. அதனால், பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள ரைபில் ரேஞ்சை பெரிதுபடுத்த அரசு நிதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இது கிடைத்தவுடன் விரைவில் பணி தொடங்கி விடும். மற்ற விளையாட்டுப் போட்டியைப் போல துப்பாக்கி சுடும் போட்டியினை தனியார் அமைப்புகள் நடத்த முடியாது. ரைபில் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் ரைபில் கிளப் மூலமே இந்த போட்டியினை நடத்த முடியும். ரைபில் கிளப்பினை மேம்படுத்தும் பணி 2017 ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறினார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...