கோவை ரைபில் கிளப்பை மேம்படுத்தும் முயற்சி தீவிரம்- காவல் ஆணையர்

கோவை பிஆர்எஸ் காவல் பயிற்சி மைதானத்தில் கடந்த 1956ம் வருடம் முதல் ரைபில் கிளப் இயங்கி வருகிறது. அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பிஆர்எஸ் ரைபில் கிளப்பை மேம்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

''இந்த ரைபில் கிளப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 70 பேர் நிரந்திர உறுப்பினர்களாவர். நிரந்திர உறுப்பினர்களுக்கு வைப்புத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதுபோக மாணவ, மாணவிகளும் 125 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், இத்தகைய பெரிய தொகையினை அவர்கள் கட்ட முடியாது என்பதால் பள்ளி மாணவ, மாணவிகளிடம் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

ரைபில் கிளப் 70 மீட்டர் நீலமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 22 ஆயிரம் சதுர அடி அளவுக்கு ரைபில் எல்லை தற்போது உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிக்கு இது போதுமானதாக இல்லை. அதனால், பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள ரைபில் ரேஞ்சை பெரிதுபடுத்த அரசு நிதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இது கிடைத்தவுடன் விரைவில் பணி தொடங்கி விடும். மற்ற விளையாட்டுப் போட்டியைப் போல துப்பாக்கி சுடும் போட்டியினை தனியார் அமைப்புகள் நடத்த முடியாது. ரைபில் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் ரைபில் கிளப் மூலமே இந்த போட்டியினை நடத்த முடியும். ரைபில் கிளப்பினை மேம்படுத்தும் பணி 2017 ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...