கூடுதல் கட்டணம் வசூலித்த வாகன நிறுத்தத்தின் உரிமம் ரத்து


கோவை, ராஜா வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தகம் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த முறையில் செயல்படும் இந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துவந்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், அதிகாரிகளை அங்கு சோதனைக்காக அனுப்பினார். இதில், அந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வாகன நிறுத்தத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

பொதுமக்களை வஞ்சித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்தத்திற்கு எச்சரிக்கை, அபராதம், ஒப்பந்தத்திற்கு இடைக்காலத் தடை என எதுவும் விதிக்காமல் நேரிடையாக ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...