யானைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் - வால்பாறை வனத்துறை


வால்பாறைக்கு உட்பட்ட சின்கோனா, சிறுகுன்றா, நல்லமுடி, பன்னிமேடு மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகள், பள்ளிக் கூடம், சத்துணவுக் கூடம், ரேசன் கடை உள்ளிட்டவற்றை இரவு நேரங்களில் சேதப்படுத்துவது வழக்கம். ஆனால், சில காலமாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிடுவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், புதனன்று கேரள மாநில எல்லையான வாகமலை எஸ்டேட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு இருந்தன. அதில் ஒரு யானை இரவு நேரத்தில் குட்டியிட்டு தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளின் நடவடிக்கை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த தாய் யானையானது குட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கும் எனவே பொது மக்கள் யாரும் அதன் அருகே சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...