கோவையில் காதலியை தாக்கிய காதலன் கைது

திருமணம் செய்ய மறுத்த காதலியை பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயே கண்ணாடி பாட்டிலால் காதலன் 

தாக்கியதைத்தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிவில் பொறியியல் பட்டதாரி இளைஞரான வேம்புராஜ் என்பவருக்கும், கனகலட்சுமி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்துவரும் கனகலட்சுமியைக் காண வேம்புராஜ் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என வேம்புராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கனகலட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த வேம்புராஜ் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலால் கனகலட்சுமியின் கழுத்தில் பலமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கனகலட்சுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வடவள்ளி காவல் துறையினர் வேம்புராஜின் மீது பெண் வன்கொடுமைச் சட்டம், தமிழ்நாடு மகளிர் துண்புறுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...