கோவையில் தொடரும் யானைகள் மரணம்- அதிர்ச்சியில் வன ஆர்வலர்கள்


கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியானது நீர்நிலைகள் நிறைந்த, அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு, யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 

இந்நிலையில், வியாழனன்று அப்பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இறந்துள்ள யானைக்கு சுமார் ஒரு வயது மட்டுமே இருக்கும் என்றும், யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உண்மைத் தகவல் தெரியவரும் என்றனர்.



கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று இப்பகுதியின் அருகாமையில் கைவிடப்பட்ட ஒரு குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அந்த யானை உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...