காற்று மாசுபாடு காரணமாக, டெல்லியில் 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டெல்லியில் கடந்த ஒரு வருடமாக காற்று மிகவும் மாசுபட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது டெல்லி அரசு. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி பலரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதில் அன்று இரவே டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் சுவாசக் கோளாறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பலரும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதால், டெல்லியில் உள்ள 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பிறகே பெட்ரோல், டீசல் போன்ற வாகன புகையின் காரணமாக காற்றானது அதிக அளவு மாசுபடுவதாக டெல்லி அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் திங்கட் கிழமைக்குள் புகைமூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று சுகாதார துறை அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...