காற்று மாசுபாடு காரணமாக, டெல்லியில் 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டெல்லியில் கடந்த ஒரு வருடமாக காற்று மிகவும் மாசுபட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது டெல்லி அரசு. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி பலரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதில் அன்று இரவே டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் சுவாசக் கோளாறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பலரும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதால், டெல்லியில் உள்ள 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பிறகே பெட்ரோல், டீசல் போன்ற வாகன புகையின் காரணமாக காற்றானது அதிக அளவு மாசுபடுவதாக டெல்லி அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் திங்கட் கிழமைக்குள் புகைமூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று சுகாதார துறை அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...