5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு  மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மதுபான கூடம் ஓன்றில் மது அருந்திக்கொண்டு இருந்த இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பெருமாள் மற்றும் சீனிவாசன் என்பவர்களை மற்றொரு குழுவை சேர்ந்த நாகேந்திரன், வீரன், விஜி, மணி, சந்தோஷ்,ராஜன்,செந்தில் ஆகிய ஏழு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.அப்போது அவர்கள் பெருமாளையும் சீனிவாசனையும் கத்தியால் குத்தியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.சீனிவாசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த வழக்கில் 7 பேரையும் துடியலூர் போலிசார் கைது செய்தனர்.இந்த வழக்கு கோவை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் செந்தில், மணி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் அவர்கள் இருவரையும் விடுவித்த நீதிபதி கார்த்திகேயன், மற்ற 5 பேரான நகேந்திரன்,விஜி,வீரன்,ராஜன், சந்தோஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்திரவிட்டார்.கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...