எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து தற்கொலை


கோவை அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சௌந்தரராஜன் (28). அப்பகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை அரசு பொது மருத்துவமனையில் சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே ஞாயிறன்று சூலூர் அருகே உள்ள கல்லுக்குழியின் அருகே இவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது கல்லுக்குழியில் விழுந்து சௌந்தரராஜன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சூலூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...