மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாளான இன்று...


கணவர் இறந்ததற்கான குடும்ப நிதி வழங்கக் கோரி முதாட்டி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த செட்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மா (எ) ரமலத். இவர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் பிரிவில் மனு அளித்தார். அம்மனுவில், கூறியிருப்பதாவது:-



என் கணவர் குன்னிமுகமது இறந்த பின் குடும்ப நிதிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் அதனை என் கணவரது முதல் மனைவி கைப்பற்றிக்கொண்டார். எனக்குரிய பணம் வேண்டி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளேன். தமிழக முதல்வரிடமும் மனு அளித்து அவர் எனக்கு சேர வேண்டிய நிதியை வழங்கக்கோரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இதற்காக விண்ணப்பித்து வரும் எனக்கு தற்போது வரை எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் வெளியில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் முன்பு விழுந்து கண்ணம்மா தற்கொலையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.



பச்சிளங் குழந்தையுடன் மனு கொடுக்க வந்த பெண்மணி

குழந்தை பெற்று 50 நாட்களே ஆனா பெண்ணை சட்ட விரோதமாக சிறைபிடித்ததையும், கணவரை பொய் புகாரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பச்சிளங் குழந்தை உடன் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். 



காந்திபார்க், ஆர்.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதிமணி இவருக்கு குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இவருடைய கணவர் விஷ்ணு ஜெயராம் இவரைத்தேடி, கடந்த 14.10.2016 அன்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள மங்கையர்கரசி, பிந்து என்ற இரண்டு பெண் காவலர் விஷ்ணு ஜெயராம் எங்கே என கேட்டு அவரது மனைவியை மிரட்டி உள்ளதாகவும், மேலும் அவரை அவரது அக்கா வீட்டிலேயே சட்டவிரோதமாக 6 நாட்கள் சிறை பிடித்து வைத்ததாகவும், அன்னூரில் உள்ள இவரது வீட்டில் இருந்து டிவி, வாஷிங் மிசின் ஆகியவற்றை காவல்துறையினர் எடுத்து சென்றதாகவும் அந்த பெண்மணி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...