மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாளான இன்று...


கணவர் இறந்ததற்கான குடும்ப நிதி வழங்கக் கோரி முதாட்டி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த செட்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மா (எ) ரமலத். இவர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் பிரிவில் மனு அளித்தார். அம்மனுவில், கூறியிருப்பதாவது:-



என் கணவர் குன்னிமுகமது இறந்த பின் குடும்ப நிதிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் அதனை என் கணவரது முதல் மனைவி கைப்பற்றிக்கொண்டார். எனக்குரிய பணம் வேண்டி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளேன். தமிழக முதல்வரிடமும் மனு அளித்து அவர் எனக்கு சேர வேண்டிய நிதியை வழங்கக்கோரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இதற்காக விண்ணப்பித்து வரும் எனக்கு தற்போது வரை எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் வெளியில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் முன்பு விழுந்து கண்ணம்மா தற்கொலையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.



பச்சிளங் குழந்தையுடன் மனு கொடுக்க வந்த பெண்மணி

குழந்தை பெற்று 50 நாட்களே ஆனா பெண்ணை சட்ட விரோதமாக சிறைபிடித்ததையும், கணவரை பொய் புகாரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பச்சிளங் குழந்தை உடன் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். 



காந்திபார்க், ஆர்.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதிமணி இவருக்கு குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இவருடைய கணவர் விஷ்ணு ஜெயராம் இவரைத்தேடி, கடந்த 14.10.2016 அன்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள மங்கையர்கரசி, பிந்து என்ற இரண்டு பெண் காவலர் விஷ்ணு ஜெயராம் எங்கே என கேட்டு அவரது மனைவியை மிரட்டி உள்ளதாகவும், மேலும் அவரை அவரது அக்கா வீட்டிலேயே சட்டவிரோதமாக 6 நாட்கள் சிறை பிடித்து வைத்ததாகவும், அன்னூரில் உள்ள இவரது வீட்டில் இருந்து டிவி, வாஷிங் மிசின் ஆகியவற்றை காவல்துறையினர் எடுத்து சென்றதாகவும் அந்த பெண்மணி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...