கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம்


கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை இணைந்து அரசுப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி மற்றும் வினா விடை வங்கி புத்தகம் இலவசமாக 1700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 730 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் சிறப்பு ஆசிரியர் குழுவினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்துப் பாடப்பரிவுக்கான முழுமையான வழிகாட்டி மற்றும் 70 மாதிரி வினாக்கள் இடம் பெற்றுள்ளன. 



கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கே.ஆறுமுகம், கிக்கானி கல்விக் குழும தாளாளர் துசார் ஆர்.கிக்கானி, வழக்கறிஞர் கூட்டுறவு சேவா சங்க தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் அகஸ்டஸ், நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.என்.பத்மநாபன், கோவை அறம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரகுராமன், தன்னம்பிக்கை மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...