கேஎம்சிஎச் சிட்டி சென்டர் நடத்தும் இலவச ஆக்குபேஷனல் தெரபி மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்


கேஎம்சிஎச்-யின் ஒரு சிறப்பு பிரிவான ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை துறையின் சார்பாக உலக ஆக்குபேஷனல் தெரபி தினத்தை முன்னிட்டு இலவச ஆக்குபேஷனல் தெரபி முகாம் நடத்தப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் கேஎம்சிஎச் சிட்டி சென்டர், ராம் நகரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த இலவச முகாமில் கேஎம்சிஎச் ஆக்குபேஷனல் தெரபி துறையின் அனுபவமிக்க மருத்துவர்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. 

ஆக்குபேஷனல் தெரபி துறையானது உடல், மூளை மற்றும் மன வளர்ச்சி தொடர்புடைய பாதிப்புகளான கற்றலில் ஏற்படும் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைவளக்கேடு, கை, கால் வலிப்பு நோய், மனவளர்ச்சி குறைபாடு மற்றும் மனநலிவு நோய் போன்ற பாதிப்புகளால் சிரமப்படும் குழந்தைகள் முதல், மூளை, தண்டுவட முடக்கு நோய், பக்கவாதம், தலைக் காயம், பார்கின்சன் நோய், கை, கால் நரம்பு பாதிப்பு, டிமென்ஷியா என்ற மறதிநோய் பாதிப்புகளாலும், மனநோய்களால் அவதிப்படும் பெரியவர்கள் வரை மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சிறப்பு பெற்ற துறை ஆகும். 

எனவே குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் இந்த இலவச ஆக்குபேஷனல் தெரபி மருத்துவ ஆலோசனை முகாமில் பங்கு பெற்று பயனடைந்துகொள்ளலாம் என கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...