தேர்தலில் அபார வெற்றி: அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி  20ம் தேதி  அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். குடியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். 276 வாக்குகளபை் பெற்று டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவரை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அரசியல் பின்புலம்  அல்லாத ஒருவர் அமெரிக்க அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க அதிபர்களில் மிகவும் வயதான  அதிபரும் டொனால்டு டிரம்ப்பே ஆவார். இதனையடுத்து, வரும் டிசம்பர் 19ம் தேதி  பிரதிநிதிகள் கூடி  முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்வுடன் துணை  அதிபர்  தேர்வும் நடைபெறுகிறது. துணை  அதிபருக்கு ஜனநாயக கட்சி சார்பில் டிம்கைனே,  குடியரசுக் கட்சி சார்பில் மைக்பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போதைய அமெரிக்க அதிபராக பராக்  ஒபாமா உள்ளார்.  அவரது பதவிக்காலம் 2017 ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே, அமெரிக்காவின் 45வது புதிய அதிபரை தேர்வு செய்யும்  தேர்தல், அமெரிக்க நாட்டு  பாரம்பரியப்படி நவம்பர் மாதம் வரும் முதல்  திங்கட்கிழமைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையான  நேற்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி  சார்பில் ஹிலாரி  கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு   டிரம்பும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்து திட்டமிட்டபடி நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 20 கோடி பேர் இந்த  தேர்தலில் ஓட்டு போட  முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று  தங்கள் ஓட்டுக்களை செலுத்தினர்.  இந்த ஓட்டுப்பதிவு முடிந்ததும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணப்பட்டது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...