500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த பிரதமர்- திமுக வரவேற்பு


நாட்டின் பொருளாதாரத்தை மனதில் வைத்து சீர்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடைசெய்துள்ள நடவடிக்கையினை திமுக வரவேற்பதாக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் ஸ்டாலின் வருகைபுரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

''நாட்டின் சீர்திருத்தத்தை மனதில் வைத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திமுக வரவேற்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கருப்புப் பணத்தை மீட்டு சாமானியர்களின்  வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது ?. பொது மக்களுக்கு உரிய காலவகாசம் வழங்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அறிவிப்பு வெளியான போது பெட்ரோல் பங்க், பாலகம், மருந்தகங்களில் 500, 1000 ரூபாய் வாங்கப்படும் என தெரிவித்திருந்தாலும் தற்போது எங்கேயும் அந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதைப்போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...