பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கிகளில் இன்று மாற்றிக் கொள்ளலாம்..!

சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒருநாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தால் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த ஒருநாள் விடுமுறையில், பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்தன. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட உள்ளன. மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு சிறப்பு கவுண்டர்களில் இன்று புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

ஏடிஎம் மையங்கள் இன்றும் விடுமுறை என்பதால், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், புதிதாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...