77-வது வார்டில் கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெற்கு மண்டலம், 77-வது வார்டுக்குட்பட்ட சொக்கம்புதூர் பகுதியில் பொது மக்களுக்கு கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளையும், சொக்கம்புதூர் மின் மயானத்தில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மருத்துவமனையும், அங்குள்ள வரி செலுத்தும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி 77, 79 ஆகிய வார்டுக்குட்பட்ட பொன்னையராஜபுரத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வருகை பதிவை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக பயோமெட்ரிக் பயன்படுத்தும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை ஆய்வு செய்யும் விதமாக 86-வது வார்டு, செல்வபுரம் நகர்நல மருத்துவ மையத்தில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.  

இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் அனைத்து வரி செலுத்தும் இடங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து மேற்கு மண்டல அலுவலகத்திலுள்ள வரி செலுத்தும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி, உதவி ஆணையர் (வருவாய்) ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...