ரூ.40 ஆயிரம் கேட்டு இளைஞரைக் கடத்திய கும்பலை காவல்துறை கைதுசெய்து விசாரணை


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். அதேப்பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விஷ்ணு, அதேக் கல்லூரியில் உணவு விடுதியில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், வியாழனன்று மாலை பணி முடிந்து தனித்தனி வாகனத்தில் இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சண்முகம் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், விஷ்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனிடையே, மர்ம நபர்களிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்கள், விஷ்ணுவை கடத்தியிருப்பதாகவும், 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு நாளை அந்தப் பணத்தினை தந்துவிடுவதாக சண்முகம் கூறியுள்ளார். தொடர்ந்து, பீளமேடு காவல் துறையினருக்கும் ரகசியத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று மர்ம கும்பல் கூறிய இடத்திற்கு சண்முகம் சென்றார். காவல் துறையினரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். காவலர்களைக் கண்ட மர்மகும்பல் விஷ்ணுவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணு கூறிய அடையாளம் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் காவல் துறையினர் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோப் பதிவையும் சோதனையிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...