வருமான வரித்துறை அதிரடி சோதனையில் இமாச்சலில் பதுக்கிவைத்திருந்த கோடிக்கணக்கான கறுப்புப்பணம் பறிமுதல்

இமாச்சலில் பல நகரங்களில் கருப்புப்பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் அதிரடி சோதனை நடத்தினர்.  இமாச்சலில் பல நகரங்களில் நடந்த இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 9ம் தேதி அறிவித்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மேலும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. வங்கி ஏடிஎம்களும் 2 நாட்கள் செயல்படாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் வங்கிகள் செயல்பட துவங்கின. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றி வந்தனர். ஏடிஎம்களில் ரூ.4000, வங்கிகளில் ரூ.10000க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதால் பலர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.

இதனிடையே கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் அவற்றை நகைகளாக மாற்றுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து நாடு முழுவதும் தங்க, வைர கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லி சாந்தினி சவுக்கில் நகைக்கடை ஒன்றில் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 42 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்ததில் நகைக்கடைகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யுமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலில் பல நகரங்களில் கறுப்புப்பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இமாச்சலில் பல நகரங்களில் நடந்த இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி சோதனை மேலும் தொடரும் எனவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...