உத்தரபிரதேசத்தில் ஒரு கிலோ உப்பின் விலை ரூ 200 முதல் 400 வரை

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் அம்மாநிலத்தில் ஒரு கிலோ உப்பு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.சில இடங்களில் ரூ 400 வரை விற்கபடுகிறது

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,இன்றே வாங்கி இருப்பு வைக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது எனவும் தகவல்கள் பரவின.

இதனால் பயந்து போன மக்கள் உப்பு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். உப்பு தட்டுப்பாடு குறித்த பயத்தினால் மக்கள் அதிகளவு உப்பை வாங்கிக் குவிப்பதை அறிந்த சில வியாபாரிகள், ஒரு கிலோ உப்பை 200 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளனர்.

வடக்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் லக்னோ, அலகாபாத், மொராதாபாத் ஆகிய இடங்களில் இந்த அநியாய விலைக்கு உப்பு விற்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் வெறும் வதந்தி எனவும், இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. ”உத்தரபிரதேசத்தில் உப்புக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை.உப்பை அதன் உண்மையான விலையைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்கக் கூடாது. இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.” என உத்தரபிரதேச காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவிய இந்த தகவலையடுத்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரான ஹெம் பாண்டே,”நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது வெறும் வதந்தி. மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

”சில பேர் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதாக புரளியை கிளப்புகின்றனர். இது முற்றிலும் தவறான தகவல்.” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் உப்பு வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அந்தந்த பகுதி காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...