உலக நீரிழிவு தினம் முன்னிட்டு கே.எம்.சி.எச் மருத்துவமனை சிறப்பு முகாம்

உலக நீரிழிவு தினமானது, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைமையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 415 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கையின்படி 5,42,000 சிறுவர், சிறுமியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த நீரிழிவு நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை 12.11.2016 அன்று கோவை ரேஸ்கோர்ஸ்-ல் நடத்தியது. இதில் அப்பகுதியைச் சார்ந்த மக்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மற்றொரு அங்கமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்களால் விவரிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிவஞானம், கிருஷ்ணன் ஸ்வாமிநாதன், வேலாயுதம் ஆகியோர் விளக்கமளித்தனர்.



இம்முகாமினை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன்  துவக்கி வைத்தார். இம்முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பொது மக்கள் பயன்பெறும் வகையில் இவ்வாறான விழிப்புணர்வு முகாம்களை கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை தொடர்ந்து நடத்தும் என மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...