சுண்டக்கமுத்தூர் குளத்தில் லாரியில் கடத்தப்படும் மண்ணை சிறைபிடித்த பொதுமக்கள்!

சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தின் மண்ணை கவுண்டனுர் பகுதிக்கு தடுப்பனைக்காக எனக் கூறி கடத்தப்படுவதை, அப்பகுதி மக்கள் இன்று லாரியுடன் சிறைபிடித்தனர்.



இது தொடர்பாக அப்பகுதி பாஜக உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், பேரூர் வட்டம் சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் வடகிழக்கு பருவமழையின் மூலம் வெள்ள பாதிப்பை தடுக்கும் விதமாகவும், வெள்ளத்தினால் பாதிப்படையும் பகுதிகளை பாதுகாக்கவும், குளத்திற்கு மழைநீர் வரும் வாய்காலினையும் அமைத்தும் உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து தருமாறும், மேலும்  இக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளதால், குளத்தை தூர்வாருவதற்கு  கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக  இப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தாசில்தாரை சந்தித்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக இக்குளம் சரிசெய்யப்படும் என அவர் கூறினார்.



இதனையடுத்து, அப்பகுதியில் குளம் தூர்வாரப்படாமல் இருந்துவந்தது, மேலும் கவுண்டனூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்காக இக்குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு தாசில்தார் அனுமதியளித்தார். இதன் மூலம் தற்போது கடந்த நவம்பர்  5ம் தேதி முதல் இக்குளத்தில் உள்ள மண்ணினை ஒரு தனியார் லாரி சர்வீஸ் மண் எடுத்து வருகின்றனர். தினமும் 10 லாரிகளின் மூலம் மண் அள்ளப்படுவதை, கண்டு அப்பகுதிமக்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கவுண்டனூர் பகுதிக்கு இக்குளத்தில் எடுக்கப்படும் மண் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் இது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, லாரி சர்வீஸ் ஒப்பந்தத்தை மீறி மண்ணை வெளியில் விற்று வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு மக்கள் இன்று மதியம் இப்பகுதியில் இருந்து கடத்தப்படும் மண் லாரியை சிறைபிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



பின்னர், குறித்து தகவலை ஊர் பொதுமக்களின் கையெழுத்தின் மூலம் பேரூர் காவல்நிலையத்திலும், தாசில்தரிடமும் புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்த தாசில்தார் லாரியினை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...