சுண்டக்கமுத்தூர் குளத்தில் லாரியில் கடத்தப்படும் மண்ணை சிறைபிடித்த பொதுமக்கள்!

சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தின் மண்ணை கவுண்டனுர் பகுதிக்கு தடுப்பனைக்காக எனக் கூறி கடத்தப்படுவதை, அப்பகுதி மக்கள் இன்று லாரியுடன் சிறைபிடித்தனர்.



இது தொடர்பாக அப்பகுதி பாஜக உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், பேரூர் வட்டம் சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் வடகிழக்கு பருவமழையின் மூலம் வெள்ள பாதிப்பை தடுக்கும் விதமாகவும், வெள்ளத்தினால் பாதிப்படையும் பகுதிகளை பாதுகாக்கவும், குளத்திற்கு மழைநீர் வரும் வாய்காலினையும் அமைத்தும் உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து தருமாறும், மேலும்  இக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளதால், குளத்தை தூர்வாருவதற்கு  கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக  இப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தாசில்தாரை சந்தித்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக இக்குளம் சரிசெய்யப்படும் என அவர் கூறினார்.



இதனையடுத்து, அப்பகுதியில் குளம் தூர்வாரப்படாமல் இருந்துவந்தது, மேலும் கவுண்டனூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்காக இக்குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு தாசில்தார் அனுமதியளித்தார். இதன் மூலம் தற்போது கடந்த நவம்பர்  5ம் தேதி முதல் இக்குளத்தில் உள்ள மண்ணினை ஒரு தனியார் லாரி சர்வீஸ் மண் எடுத்து வருகின்றனர். தினமும் 10 லாரிகளின் மூலம் மண் அள்ளப்படுவதை, கண்டு அப்பகுதிமக்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கவுண்டனூர் பகுதிக்கு இக்குளத்தில் எடுக்கப்படும் மண் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் இது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, லாரி சர்வீஸ் ஒப்பந்தத்தை மீறி மண்ணை வெளியில் விற்று வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு மக்கள் இன்று மதியம் இப்பகுதியில் இருந்து கடத்தப்படும் மண் லாரியை சிறைபிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



பின்னர், குறித்து தகவலை ஊர் பொதுமக்களின் கையெழுத்தின் மூலம் பேரூர் காவல்நிலையத்திலும், தாசில்தரிடமும் புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்த தாசில்தார் லாரியினை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...