பெண் உதவி பேராசிரியரிடம் 12 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மனைவி பிரதீபா (32). தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு பிரதீபா மற்றும் அவரது சகோதரி கிருத்திகா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர். சின்னியம்பாளையம் பேருந்து  நிலையம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி சங்கிலையை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே அருகிலிருந்த பொது மக்கள், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அவர்கள் இருவரும் அதிவேகமாக தப்பிச்சென்றனர். இது குறித்து பிரதீபா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...