மாடியில் இருந்து தவறி விழுந்து பத்திரிகையாளர் மரணம் சக பத்திரிகையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரிப்பு

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் யாழ்முடி நாதன் என்கிற கவுதம் (27). இவர் லோட்டஸ் மற்றும் மூண் தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கடந்த வாரம் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு சென்றார். திருமணம் முடிந்து சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு, எதிர்பாராத விதமாக வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 



இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுதம்-ன் உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

தற்போது கவுதம்-ன் உடல், அவரது சொந்த ஊரான கோவைக்கு கொண்டுவர உள்ளது.  இது குறித்து தகவலறிந்த கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று காலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரித்துள்ளனர். 



உடன் பணியாற்றிய  பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சக பத்திரிக்கையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...