6 நாள் சுற்றுப்பயணமாக மும்பை வந்தடைந்தார் இஸ்ரேல் ஜனாதிபதி ரிவ்லின்

இந்தியா-இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் ஜனாதிபதி ரியூவென் ரிவிலின் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மும்பை வந்து சேர்ந்தார்.

இன்று காலை அரசு உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் மும்பை விமானநிலையம் வந்து சேர்ந்த ரிவ்லின், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லி சென்றடைந்ததும். பிரதமர் மோடி வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆகியோரை சந்தித்து பேசும் ரிவ்லின், இரு நாட்டு கூட்டு திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட உள்ளார்.

சண்டிகாரில் நடைபெறும் அக்ரோ-டெக் மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து ரிவ்லின் கலந்து கொள்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நினைவிடத்துக்கு செல்கிறார். பின்னர் மகாத்மா காந்தியிடன் நினைவிடம் செல்லும் ரிவ்லின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

ரிவ்லின் இந்தியா புறப்படுவதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில், “ இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் நட்பு நாடான இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளதாகவும், இருநாடுகளுக்கும் இடையே பழங்கால பாரம்பரியம் உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான நட்பு மேலும் நெருக்கமாக வளரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...